/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையின் தீவிரம் குறைந்தது; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
/
மழையின் தீவிரம் குறைந்தது; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
மழையின் தீவிரம் குறைந்தது; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
மழையின் தீவிரம் குறைந்தது; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 31, 2025 09:53 PM

வால்பாறை; வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த ஜூன் மாதம், 26ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிரித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, மதகுகள் வழியாக கேரளாவுக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த இரண்டு மாதத்தில் சோலையாறு அணை நான்கு முறை நிரம்பியது. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக வால்பாறையில் பருவமழையின் தீவிரம் குறைந்து, சாரல் மழை பெய்கிறது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து குறைந்துள்ளது. சாரல் மழையால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று காலை நிலவரப்படி, சோலையாறு அணையில், 158.34 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,182 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,497 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது. அதிகபட்சமாக மேல்நீராறில், 12 மி.மீ., மழை பெய்தது.