/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கபாலி' யானைக்கு தொல்லை கொடுத்த சுற்றுலா பயணியர்: கேரள வனத்துறை நடவடிக்கை
/
'கபாலி' யானைக்கு தொல்லை கொடுத்த சுற்றுலா பயணியர்: கேரள வனத்துறை நடவடிக்கை
'கபாலி' யானைக்கு தொல்லை கொடுத்த சுற்றுலா பயணியர்: கேரள வனத்துறை நடவடிக்கை
'கபாலி' யானைக்கு தொல்லை கொடுத்த சுற்றுலா பயணியர்: கேரள வனத்துறை நடவடிக்கை
ADDED : அக் 25, 2025 01:39 AM

வால்பாறை: வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் 'கபாலி' என்ற யானைக்கு தொல்லை கொடுத்ததால், சுற்றுலா பயணியரை விரட்டியது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர்.
வால்பாறையிலிருந்து மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில் 'கபாலி' என்று பெயரிடப்பட்ட யானை அடிக்கடி ரோட்டின் குறுக்கே நின்று வாகனங்களை வழிமறிக்கிறது.
கடந்த, 19ம் தேதி அதிரப்பள்ளி ரோட்டில் முகாமிட்ட 'கபாலி' யானை, இரவு முழுவதும் வாகனங்களை செல்ல விடாமல் தடுத்தது.
இந்நிலையில், நேற்று காலை மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி அருவிக்கு பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் பைக்குகளில் சென்றனர்.
அப்போது, சாலையோரம் 'கபாலி' யானை நின்று கொண்டிருந்தது. பைக்கில் சென்ற சுற்றுலா பயணியர் வாகனத்தை ரோட்டில் நிறுத்தி விட்டு, யானைக்கு மிக அருகில் சென்று கூச்சலிட்டனர். இதனால், கோபமடைந்த யானை பிளிறிக்கொண்டு அவர்களை விரட்டியது. இந்த சம்பவத்தில் பைக்கில் சென்ற சுற்றுலா பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கேரள வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அதிரப்பள்ளி ரோட்டில் 'கபாலி' யானை அடிக்கடி முகாமிடுகிறது. இதனால் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணியர் மிகுந்த கவனமாக செல்ல வேண்டும். யானையின் அருகில் சென்று துன்புறுத்திய தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணியர் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
யானை ரோட்டில் நிற்பதை கண்டால் வாகனங்களில் செல்பவர்கள் உடனடியாக வனத்துறைக்கு, வாழச்சால் சோதனை சாவடி தொலைபேசி எண்: 91884 07532 அல்லது மளுக்கப்பாறை சோதனை சாவடிக்கு, 8547601953 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

