sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 போக்குவரத்து விழிப்புணர்வு தேவை; முக்கிய பகுதிகளில் அறிவிப்பு வைக்கணும்

/

 போக்குவரத்து விழிப்புணர்வு தேவை; முக்கிய பகுதிகளில் அறிவிப்பு வைக்கணும்

 போக்குவரத்து விழிப்புணர்வு தேவை; முக்கிய பகுதிகளில் அறிவிப்பு வைக்கணும்

 போக்குவரத்து விழிப்புணர்வு தேவை; முக்கிய பகுதிகளில் அறிவிப்பு வைக்கணும்


ADDED : நவ 22, 2025 05:27 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், முக்கிய வழித்தடங்களில், வாகன ஓட்டுநர்களை 'அலர்ட்' செய்யும் வகையில் போக்குவரத்து விதிகளை உள்ளடக்கிய விழிப்புணர்வு பலகை வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகர ரோடுகளில், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, நகரில் முக்கிய ரோடுகள், சிக்னல்களில் 'சி.சி.டி.வி.,' கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இருப்பினும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்கள் மற்றும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகரில் இயக்கப்படுவதால், நெரிசலை தவிர்க்க முடியாத நிலை உள்ளது.

அதேபோல, குறுகலான ரோடு, சாலை சந்திப்புகளில் வேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது. ஒருவழிப்பாதையில் செல்வது, ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்துவது என, அத்துமீறல் தொடர்கிறது.

விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு, பொறுப்பற்ற வாகன ஓட்டுநர்கள் காரணமாக உள்ளனர். எனவே, முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து விதிமீறலை சுட்டிக் காட்டும் வகையில், விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள் கூறியதாவது:

போக்குவரத்து விதியை முழுமையாகத் தெரியாமலும், தெரிந்தாலும் அதை பின்பற்றும் எண்ணம் இல்லாமலும் சிலர் செயல்படுகின்றனர். நகர எல்லைக்குள் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு இருப்பதில்லை. அதிவேக வாகனங்கள், பல சமயங்களில் விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.

'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள், குறுகிய மற்றும் நெருக்கடி நிறைந்த ரோடுகளில் நிற்கும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை அதிகரிக்கச் செய்கிறது.

இந்நிலையில், வாகன ஓட்டுநர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து விதிகளை உள்ளடக்கிய விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us