/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யூனியன் பாங்க் ஆப் இந்தியா புதிய மண்டல அலுவலகம்
/
யூனியன் பாங்க் ஆப் இந்தியா புதிய மண்டல அலுவலகம்
ADDED : ஏப் 05, 2025 11:05 PM

கோவை: யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின், 19வது மண்டல அலுவலகம், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ளது.ராமநாதபுரம், சவுரிபாளையம் பிரிவு, கிருஷ்ணசாமி நகர், வேதவ் மெஜெஸ்டி முதல் தளத்தில், மண்டல அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குனர் மணிமேகலை, புதிய மண்டல அலுவலகத்தை துவக்கி வைத்தார்.
கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து பிராந்தியங்களை ஒருங்கிணைக்கும், 280 கிளைகளை உள்ளடக்கியதாக, கோவை மண்டல அலுவலம் செயல்படும் என, அவர் தெரிவித்தார்.
நிகழ்வில், கோவை மண்டல தலைவர் ராஜ்குமார், சென்னை மண்டல தலைவர் சத்யபென் பெஹ்ரா, கோவை பிராந்திய அலுவலக துணைப் பொது மேலாளர் லாவண்யா மற்றும் மேலாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

