ADDED : அக் 12, 2025 11:46 PM

கோவை:அண்ணா பல்கலை, 10வது மண்டலத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, பெண்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், மகாலிங்கம் இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது. இதில், 10 அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், பி.ஏ., இன்ஜி., கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் மகாலிங்கம் இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வென்றது.
இரண்டாம் அரையிறுதியில், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில், ஜெ.சி.டி., தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வென்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், பி.ஏ., கல்லுாரி அணியை வென்று, 'சாம்பியன்ஷிப்' தட்டியது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, மகாலிங்கம் கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார் பரிசுகள் வழங்கினார். முதலிடம் பிடித்த அணிக்கு, இந்துஸ்தான் கல்லுாரி செயலாளர் சரஸ்வதி கண்ணய்யன், உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.