/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போராட்டத்தில் ஈடுபட்ட உப்பாறு விவசாயி கைது
/
போராட்டத்தில் ஈடுபட்ட உப்பாறு விவசாயி கைது
ADDED : அக் 09, 2024 10:23 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர் தாராபுரம் தொப்பம்பட்டியை சேர்ந்த சிவக்குமார்,42 மற்றும் விவசாயிகள், உப்பாறுக்கு தண்ணீர் கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், நேற்றுமுன்தினம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக கூறிய சிவக்குமார், மீது பி.ஏ.பி., முகாம் உதவி பொறியாளர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில், விதிமீறி அரசு ஊழியர்களுக்கு இடையூறாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

