/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ சேவையை பாராட்டி வால்பாறை டாக்டர் கவுரவிப்பு
/
மருத்துவ சேவையை பாராட்டி வால்பாறை டாக்டர் கவுரவிப்பு
மருத்துவ சேவையை பாராட்டி வால்பாறை டாக்டர் கவுரவிப்பு
மருத்துவ சேவையை பாராட்டி வால்பாறை டாக்டர் கவுரவிப்பு
ADDED : ஜூலை 17, 2025 09:32 PM

வால்பாறை; வால்பாறையை சேர்ந்த டாக்டருக்கு, சென்னையில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் பரிசு வழங்கினார்.
வால்பாறையை சேர்ந்தவர் டாக்டர் முனுசாமி. இவர், அரசு மருத்தவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின், வால்பாறை மலைப்பகுதியில் வசிக்கும், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கிறார்.
இவரது சேவையை பாராட்டி, சென்னையில் நடந்த சிறந்த டாக்டர்களுக்கான பரிசு வழங்கும் விழாவில், தமிழக கவர்னர் ரவி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். வால்பாறை மக்கள் டாக்டருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
டாக்டர் முனுசாமி கூறுகையில், ''சர்வதேச டாக்டர்கள் தின விழாவில், மருத்துவ சேவையை பாராட்டி பரிசு வாங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. மலைப்பகுதி மக்களின் நலனில் அக்கறை கொண்டு, சிறப்பாக மருத்துவ சேவை செய்வேன்,'' என்றார்.