sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வானதி கார் கண்ணாடி உடைப்பு; வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

/

வானதி கார் கண்ணாடி உடைப்பு; வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

வானதி கார் கண்ணாடி உடைப்பு; வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

வானதி கார் கண்ணாடி உடைப்பு; வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


ADDED : டிச 04, 2024 11:00 PM

Google News

ADDED : டிச 04, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சட்டமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்னையில், வானதி சீனிவாசன் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கு விசாரணை வரும், 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அப்போது, தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ரங்கே கவுடர் வீதியில், வானதி சீனிவாசன் தலைமையில் பா.ஜ.,வினர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில், அப்பகுதியில் அ.தி.மு.க.,வை சேர்ந்த ஆதிநாராயணன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் வாக்கு சேகரித்தனர்.

அப்போது இரு தரப்பினரிடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட பிரச்னையில் வானதி சீனிவாசன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இது தொடர்பாக இரு தரப்பினரும், கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, கோவை 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கிறது. இதன் வழக்கு நேற்று நடந்தது. பா.ஜ., சார்பில் வானதி சீனிவாசன் ஆஜர் ஆனார்.

சம்பவம் குறித்து நீதிபதி சுஜித் முன்னிலையில் விளக்கம் அளித்தார். விளக்கத்தை கேட்டறிந்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும், 18ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us