sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரகலியாறு கும்கி யானைகள் மானாம்பள்ளிக்கு இடமாற்றம்

/

வரகலியாறு கும்கி யானைகள் மானாம்பள்ளிக்கு இடமாற்றம்

வரகலியாறு கும்கி யானைகள் மானாம்பள்ளிக்கு இடமாற்றம்

வரகலியாறு கும்கி யானைகள் மானாம்பள்ளிக்கு இடமாற்றம்


ADDED : அக் 23, 2024 10:18 PM

Google News

ADDED : அக் 23, 2024 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: டாப்சிலிப் அருகே வரகலியாற்றில் பராமரிக்கப்பட்டு வந்த ஐந்து கும்கி யானைகள், வால்பாறை மானாம்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி (டாப்சிலிப்) வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகலியாற்றில், வனத்துறை சார்பில், 25 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரகலியாறு யானைகள் முகாமில் கடந்த ஏப்ரல் மாதம் வறட்சி நிலவியதால், அங்கு பராமரிக்கப்பட்டு வந்த ஐந்து கும்கி யானைகள் வால்பாறை அடுத்துள்ள மானாம்பள்ளி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, ஜூன் மாதம் வரை பராமரிக்கப்பட்டன.

அதன்பின், தென்மேற்குப் பருவமழை பெய்யத் துவங்கியதையடுத்து, ஜூலை மாதம், 10ம் தேதி யானைகள் மீண்டும் வரகலியாறுக்கு அழைத்து செல்லப்பட்டன.

இந்நிலையில், உலாந்தி வனச்சரம் வரகலியாறு யானைகள் முகாமில், பாகன்களின் குடியிருப்பு, சமையல் அறை, யானைகள் முகாம் சீரமைக்கும் பணி நடக்கிறது. அதனால், வரகலியாற்றில் பராமரிக்கப்பட்டு வந்த, பரணி, உரியன், சின்னதம்பி, சுயம்பு, சூரியா ஆகிய ஐந்து கும்கி யானைகள் வால்பாறை அடுத்துள்ள மானாம்பள்ளியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரீதரன் கூறியதாவது:

உலாந்தி வனச்சரகம், வரகலியாறு யானைகள் முகாமில், பராமரிப்பு பணி நடப்பதால், மானாம்பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்து கும்கி யானைகள் பராமரிக்கபடுகிறது.

கும்கி யானைகளை பாகன்கள் தினமும், காலை, மாலை நேரங்களில் வனப்பகுதியில் மேய்சலுக்கு கொண்டு செல்கின்றனர். கும்கி யானைகளை பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும், மானாம்பள்ளி வனச்சரகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us