sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முள்ளி சோதனை சாவடியில் வாகன தணிக்கை தீவிரம்

/

முள்ளி சோதனை சாவடியில் வாகன தணிக்கை தீவிரம்

முள்ளி சோதனை சாவடியில் வாகன தணிக்கை தீவிரம்

முள்ளி சோதனை சாவடியில் வாகன தணிக்கை தீவிரம்


ADDED : ஜூலை 16, 2025 10:25 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடையில் உள்ள கேரள மாநில எல்லையான முள்ளியில் வனத்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

கேரள வனப்பகுதிகளில் மாவோஸ்ட்டுகள், நடமாட்டம் உள்ளது. மாநில எல்லையோரங்களில் உள்ள வனப்பகுதிகள் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள கேரள மாநில எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள மாநில எல்லை பகுதியான முள்ளியில் உள்ள வனச்சோதனைச்சாவடியில் வனத்துறையினர் நேற்று தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

இதுகுறித்து, காரமடை வனத்துறையினர் கூறுகையில், அத்திக்கடவு, பில்லூர், முள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்நியர்கள் நடமாட்டம், வேட்டை கும்பல்கள் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என தீவிர ரோந்து மேற்கொண்டோம். பின், அப்பகுதியில் உள்ள பழங்குடியினரிடமும் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினோம், என்றனர்.






      Dinamalar
      Follow us