sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியார் துறைகளில் விசாகா கமிட்டி: உறுதிபடுத்த கோரிக்கை

/

தனியார் துறைகளில் விசாகா கமிட்டி: உறுதிபடுத்த கோரிக்கை

தனியார் துறைகளில் விசாகா கமிட்டி: உறுதிபடுத்த கோரிக்கை

தனியார் துறைகளில் விசாகா கமிட்டி: உறுதிபடுத்த கோரிக்கை


ADDED : ஜன 03, 2025 09:59 PM

Google News

ADDED : ஜன 03, 2025 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் 'விசாகா கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013ன் படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் பற்றி புகார் தெரிவிக்க, விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

இக்கமிட்டி, ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து அரசிடம் அளிக்கிறது. அதில், பெண் ஊழியரை தொட்டுப் பேசுவது, அவரை பாலியலுக்கு அழைப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசுவது, ஆபாசமான படங்களை காட்டுவது உள்ளிட்டவை, பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் 'விசாகா கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தன்னார்வலர்கள் கூறியதாவது: பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது கட்டாயமாகும். அதன்படி, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பல தனியார் துறைகளில் இக்கமிட்டி அமைக்கப்படவில்லை.

பெண்கள் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, அனைத்து அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் இக்கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us