sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்

/

குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்

குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்

குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்


ADDED : பிப் 05, 2025 11:38 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: காரமடை ஊராட்சி ஒன்றியம், மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும், மெயின் குடிநீர் குழாயும், கோவை மாநகராட்சிக்கு செல்லும் கவுண்டம்பாளையம் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்ட குழாயும் பதிக்கப்பட்டுள்ளன.

காரமடை தோலம்பாளையம் சாலையில், மருதய்யா நகர் பிரிவில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரவு பகலாக பல லட்சம் லிட்டர் குடிநீர், வீணாக வெளியேறி வருகிறது. இது மருதூர் ஊராட்சியின் குடிநீர் குழாயா, அல்லது கோவை கவுண்டம்பாளையம் வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயா என தெரியாமல் உள்ளதால், ஊராட்சி நிர்வாகத்தினரும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.

குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரங்களுக்கு மேலாக, குடிநீர் வெளியேறி வருகிறது. இந்த உடைப்பை சரி செய்ய எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us