/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : செப் 12, 2025 10:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடை வெள்ளியங்காடு சாலையில், வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், தொண்டாமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் மருதூர் ஊராட்சி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதில் ஏதோ ஒரு குழாயில் உடைப்பு ஏற் பட்டுள்ளது. இரவு பகலாக குழாயிலிருந்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி வருகிறது. இந்த குழாய் உடைப்பை சரி செய்ய, குடிநீர் வடிகால் வாரியம், மருதூர் ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அதனால் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வெளியேறி வருகிறது.