/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் நீர் நிரப்பணும்!
/
கால்நடைகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் நீர் நிரப்பணும்!
கால்நடைகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் நீர் நிரப்பணும்!
கால்நடைகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் நீர் நிரப்பணும்!
ADDED : ஏப் 15, 2025 08:37 PM
பொள்ளாச்சி; கால்நடைகளின் தாகம் தீர்க்க, கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெள்ளாச்சி சுற்றுப் பகுதி கிராமங்களில், விவசாயம் பிரதானமாக உள்ளது. அதனை சார்ந்து பலர், பால் உற்பத்திக்காக, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டும் வருகின்றனர். கோடை துவங்கி உள்ளதால், பல பகுதிகளில் நிலவும் வறட்சியால், நீர் நிலைகள் வறண்டு காணப் படுகின்றன.
மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்படும் கால்நடைகளுக்கு போதியளவு தண்ணீர் கிடைப்பதில்லை. கால்நடைகளின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, செரிமானக்கோளாறு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அவ்வகையில், கால் நடைகளின் தாகம் தீர்க்க கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்ப, ஊராட்சி நிர்வாகத்தினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: அனைத்து கால்நடை மருந்தகத்திலும், சிகிச்சை மற்றும் கருவூட்டலுக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளுக்கு, குடிநீர் தொட்டி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான தொட்டிகளில் தண்ணீர் கிடையாது.
இதேபோல, பல கிராமங்களில், தொட்டி ஏற்படுத்தப்பட்டும் தண்ணீர் இல்லாமல் உள்ளது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரை, கால்நடைகள் பருகி வருகின்றன. தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.