/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு எந்தெந்த பள்ளிகள் தகுதி
/
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு எந்தெந்த பள்ளிகள் தகுதி
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு எந்தெந்த பள்ளிகள் தகுதி
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு எந்தெந்த பள்ளிகள் தகுதி
ADDED : நவ 11, 2025 12:57 AM

கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் டி.கே.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் மாணவர்களின் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்,'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. கல்வி மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் சார்பில் வினாடி-வினா போட்டிகள், தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளியளவிலான சுற்றில், வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாய்பாபாகாலனியில் உள்ள இப்பள்ளியில், நடைபெற்ற தகுதி சுற்றில் 214 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'சி' அணி முதலிடம் பெற்றது.
அந்த அணியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் முகமது ரெய்யான் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் மேத்யூ தாமஸ் சிஎம்ஐ, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
டி.கே.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சின்னவேடம்பட்டியில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற, தகுதி சுற்றில் 60 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'எப்' அணி முதலிடம் பெற்றது.
அந்த அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பூமிகா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவி அக் ஷயா ஸ்ரீ ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வர் சுஜாதா, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

