sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'சிறகுகள்' கடன் திட்டம்; பயன்படுத்த அழைப்பு

/

'சிறகுகள்' கடன் திட்டம்; பயன்படுத்த அழைப்பு

'சிறகுகள்' கடன் திட்டம்; பயன்படுத்த அழைப்பு

'சிறகுகள்' கடன் திட்டம்; பயன்படுத்த அழைப்பு


ADDED : ஜூன் 13, 2025 10:13 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; 'சிறகுகள்' என்ற சிறப்பு கடன் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள, மூன்றாம் பாலினத்தவருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை நிதி சேவைகளை பெறுவதில், சிரமங்களை சந்திக்கின்றனர். பொருளாதார ரீதியாக அவர்களை பலப்படுத்தும் வகையில், 'சிறகுகள்' என்ற சிறப்பு கடன் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில், இதற்காக கடன் வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோர் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இந்த கடன், சமூகநலன் சார்ந்த கடன் என்பதாலும், மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்பதாலும், 5 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறு தொழில்கள், சுய தொழில் செய்பவர்கள் இந்த கடன்களை பெற இயலும். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக, நடப்பு நிதியாண்டில் இதுவரை 4 பேருக்கு, ரூ.2 லட்சம் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளை அணுகலாம்.






      Dinamalar
      Follow us