sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருமணமான ஐந்தே நாட்களில் கணவர் வீட்டார் மீது பெண் புகார்; கணவர், மாமனார், மாமியாருக்கு சிறை 

/

திருமணமான ஐந்தே நாட்களில் கணவர் வீட்டார் மீது பெண் புகார்; கணவர், மாமனார், மாமியாருக்கு சிறை 

திருமணமான ஐந்தே நாட்களில் கணவர் வீட்டார் மீது பெண் புகார்; கணவர், மாமனார், மாமியாருக்கு சிறை 

திருமணமான ஐந்தே நாட்களில் கணவர் வீட்டார் மீது பெண் புகார்; கணவர், மாமனார், மாமியாருக்கு சிறை 


ADDED : மார் 19, 2025 09:22 PM

Google News

ADDED : மார் 19, 2025 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; திருமணமான ஐந்து நாட்களில், கணவர் வீட்டார் மீது பெண் அளித்த புகாரில் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒண்டிப்புதுார் பகுதியை சேர்ந்தவர், 27 வயது பெண்; இவருக்கு கடந்த 12ம் தேதி அதே பகுதியை சேர்ந்த, கல்யாண சுந்தரம், 60, கல்பனா, 48 ஆகியோரின் மகன் சரவணகுமார், 29 என்பவருடன் திருமணமானது. கடந்த 17ம் தேதி சரவணகுமாரின் மொபைல் போனை, அவரது மனைவி பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது, சரவணகுமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர், சரவணகுமார் மற்றும் அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும், பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.

பெண்ணுக்கு திருமணத்தின் போது கொடுத்த, 40 சவரன் தங்க நகை உள்ளிட்ட பொருட்களையும் ஏமாற்றி பெற்றுக்கொண்டனர்.

இது குறித்து அப்பெண், கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில், போலீசார் சரவணகுமார், கல்யாண சுந்தரம், கல்பனா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us