ADDED : ஏப் 28, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தாமரைக்குளம் பஸ் ஸ்டாப் பகுதியில் நடந்த வாகன விபத்தில் பெண் காயமடைந்தார்.
கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தை சேர்ந்தவர் வளர்மதி, 34. இவர் தாமரைக்குளம் பகுதியில் பஸ்சில் இருந்து சர்வீஸ் ரோட்டில் இறங்கிய போது, அதே ரோட்டில் அஜாக்கிரதையாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் வளர்மதி மீது மோதியதில் விபத்து நடந்தது.
இதில் படுகாயமடைந்த வளர்மதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.