sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மத்திய அரசு சுய உதவிக்குழு உதயம் தெற்கு தொகுதி மகளிர் சேர ஆர்வம்

/

மத்திய அரசு சுய உதவிக்குழு உதயம் தெற்கு தொகுதி மகளிர் சேர ஆர்வம்

மத்திய அரசு சுய உதவிக்குழு உதயம் தெற்கு தொகுதி மகளிர் சேர ஆர்வம்

மத்திய அரசு சுய உதவிக்குழு உதயம் தெற்கு தொகுதி மகளிர் சேர ஆர்வம்


ADDED : டிச 23, 2024 04:19 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மக்கள் சேவை மையம் சார்பில், ராம்நகர் விஜய் பார்க் இன் ஓட்டலில், மத்திய அரசு பங்களிப்போடு, துவங்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழு பயிற்சி முகாம், கோவை தெற்கு தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தலைமையில் நடந்தது.

இதில் அவர் பேசியதாவது:

கோவையில் செயல்பட்டு வரும் மக்கள் சேவை மையம், மகளிரை முன்னிறுத்தி ஏராளமான தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

அதன் ஒரு மைல்கல் தான், தற்போது துவங்கப்பட்டுள்ள மத்திய அரசு சுயஉதவிக்குழு. கோவை தெற்கு தொகுதியில் மட்டும், 30 சுயஉதவிக்குழுக்கள் துவங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் 12 முதல் 15 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு, மத்தியஅரசின் மனிதவளமேம்பாட்டுத்துறை சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வங்கிக்கடன் உதவியும் வழங்கப்படுகிறது. இக்குழுக்களை, கோவை தெற்கு தொகுதியில் மட்டுமல்லாமல், கோவை முழுவதும் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை மகளிர் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, வானதி சீனிவாசன்பேசினார். திரளான சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த மகளிர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us