/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்குபுறவழிச்சாலை திட்ட ரோட்டில் பணிகள் தீவிரம்! சிறுபாலங்கள், மழைநீர் வடிகால் அமைப்பு
/
மேற்குபுறவழிச்சாலை திட்ட ரோட்டில் பணிகள் தீவிரம்! சிறுபாலங்கள், மழைநீர் வடிகால் அமைப்பு
மேற்குபுறவழிச்சாலை திட்ட ரோட்டில் பணிகள் தீவிரம்! சிறுபாலங்கள், மழைநீர் வடிகால் அமைப்பு
மேற்குபுறவழிச்சாலை திட்ட ரோட்டில் பணிகள் தீவிரம்! சிறுபாலங்கள், மழைநீர் வடிகால் அமைப்பு
ADDED : மே 15, 2025 11:26 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில், சிறுபாலங்கள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதையடுத்து, ரோடு அமைப்பது, சாலை சந்திப்புகளில் மேம்படுத்தப்படும்.
பொள்ளாச்சி நகரில் நிலவும் நெரிசலை கட்டுப்படுத்த, மேற்குபுறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சாலை, கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில், ரோடு அமைக்கப்படுகிறது.
ரோட்டின் இருபக்கமும், மூன்று மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இந்த புறவழிச்சாலை பணிக்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 34,718 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மொத்தம், 73 கோடியே, 35 லட்சம் நிதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த, 2021ம் ஆண்டு திட்டப் பணிகள் துவங்கிய, நான்கு மாதங்கள் சுறுசுறுப்பாக நடந்தது.
இத்திட்ட பணிக்காக, 171 மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், ஜமீன் ஊத்துக்குளியில் இருந்து கோவை ரோடு ஆ.சங்கம்பாளையம் வரை, நான்கு கி.மீ., துாரத்துக்கு பழைய குழாய்களுக்கு மாற்றாக, ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.ரோடு போடும் பணிகளை துவங்கினால், பயனாக இருக்கும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.அதில், முதற்கட்டமாக மழைநீர் வடிகால், சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் நிறைவடைந்ததும், ரோடு அமைக்கப்படும்; ஜமீன்ஊத்துக்குளி, நல்லுார், ஆர்.பொன்னாபுரம், கோவை ரோடு சந்திப்பு பகுதிகள் மேம்படுத்தப்படும். இவற்றை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.