/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கில்தொழிலாளிக்கு ஆயுள்சிறை
/
கொலை வழக்கில்தொழிலாளிக்கு ஆயுள்சிறை
ADDED : டிச 19, 2025 06:00 AM

கோவை,டிச.19-
கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டது.
மதுக்கரை அருகேயுள்ள பிச்சனுார், அண்ணாநகரை சேர்ந்தவர் நாகமாணிக்கம்,55; கூலி தொழிலாளி. கடந்த 2020, ஜூன், 4 ல், குடிபோதையில் அம்பலப்பாறையில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த தேவராயபுரம் தொழிலாளி முருகேஷ்,56, மீது மோதி, அவர் கால்களை மிதித்தார். இதனால் தகராறு ஏற்பட்டது. முருகேசை தாக்கிவிட்டு அங்கிருந்து நாகமாணிக்கம் சென்றார். ஆத்திரமடைந்த முருகேஷ் பின் தொடர்ந்து சென்று, நாகமாணிக்கத்தை வழிமறித்து தாக்கி கட்டையால் அடித்து கொலை செய்தார். கே.ஜி.சாவடி போலீசார் விசாரித்து, முருகேசை கைது செய்தனர். முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சிவகுமார் குற்றம் சாட்டப்பட்ட முருகேசிற்கு, ஆயுள்சிறை, 5,500 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் மோகன்பிரபு ஆஜரானார்.

