/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளி கொலை: ஆணையம் விசாரணை
/
தொழிலாளி கொலை: ஆணையம் விசாரணை
ADDED : டிச 29, 2025 05:15 AM
தொண்டாமுத்தூர்:கோவை மாவட்டம், சீங்கப்பதியை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை,35; கூலித்தொழிலாளி. திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். கடந்த மாதம், 6ம் தேதி இரவு, ஆலாந்துறை, டாஸ்மாக் மதுக்கடை அருகே, சிறுவாணி மெயின்ரோட்டில், ராஜதுரை நின்று கொண்டிருக்கும்போது, தென்காசியை சேர்ந்த ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய சகோதரர்கள், ராஜதுரையிடம் மது அருந்த பணம் கேட்டு தாக்கியதில், ராஜதுரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜதுரை, 10 நாளில் இறந்தார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிந்து, ராமன் மற்றும் லட்சுமணனை கைது செய்தனர்.
இது தொடர்பாக, மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய உறுப்பினர்கள் செல்வகுமார், பொன்தோஸ், தெற்கு ஆர்.டி.ஓ., மாருதி பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று முன்தினம் சீங்கப்பதி மலை கிராமத்தில் விசாரணை நடத்தினர்.

