sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் 'ரேபிஸ்' தாக்கி இளம்பெண் மரணம்; தெரு நாய் கடித்ததால் நேர்ந்த சோகம்

/

கோவையில் 'ரேபிஸ்' தாக்கி இளம்பெண் மரணம்; தெரு நாய் கடித்ததால் நேர்ந்த சோகம்

கோவையில் 'ரேபிஸ்' தாக்கி இளம்பெண் மரணம்; தெரு நாய் கடித்ததால் நேர்ந்த சோகம்

கோவையில் 'ரேபிஸ்' தாக்கி இளம்பெண் மரணம்; தெரு நாய் கடித்ததால் நேர்ந்த சோகம்

5


ADDED : அக் 12, 2024 12:09 AM

Google News

ADDED : அக் 12, 2024 12:09 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகராட்சி பகுதியில், தெரு நாய்கள் வீதிகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தாலும், அவற்றின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

நாய்க்கடிக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி வடக்கு மண்டலம், 21வது வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டி எல்.ஜி.பி., நகரைச் சேர்ந்த, 23 வயது பெண், மூன்று மாதங்களுக்கு முன், அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்களுக்கு உணவளித்தார்.

அப்போது, சண்டையிட்டுக் கொண்டிருந்த தெரு நாய்களில் ஒன்று, அந்த இளம்பெண்ணை கடித்து விட்டது. அவர், 'ரேபிஸ்' நோய்க்கான ஊசி போடாமல் விட்டு விட்டார். இதனால் அவரை, 'ரேபிஸ்' நோய் தாக்கியது.

இதை, தாமதமாகவே உணர்ந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us