/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடும்பத்தினரை தாக்கிய வாலிபர் சிறையிலடைப்பு
/
குடும்பத்தினரை தாக்கிய வாலிபர் சிறையிலடைப்பு
ADDED : டிச 11, 2025 06:44 AM
செல்வபுரம்: செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர், 35 வயது பெண்ணின் மகளுக்கு தொண்டாமுத்துார் என்.டி.பி., வீதியை சேர்ந்த சரண், 30 என்பவர் மொபைல் எண்ணை கொடுத்து பேசி வந்தார். இதுகுறித்து தாய்க்கு தெரிய வந்ததால், அவர் மகளை கண்டித்ததுடன், சரணின் பெற்றோரிடமும் தெரிவித்தார். நேற்று முன்தினம், செல்வபுரம் பாரதி நகரில் பெண், தனது தாய் மற்றும் மகளுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சரண், பெண்ணின் மகளை முறைத்துக் கொண்டிருந்தார். பெண், சரணிடம் கேள்வி எழுப்பினார். சரண், பெண், அவரது மகள், அவரது தாயார் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கினார். அப்பெண் செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், சரணை சிறையில் அடைத்தனர்.

