/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர் நீச்சலில் சாம்பியன்ஷிப்
/
பள்ளி மாணவர் நீச்சலில் சாம்பியன்ஷிப்
ADDED : ஜூலை 13, 2011 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்: சென்னையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கடலூர் மாணவர் தனிநபர் சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றார்.சென்னையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்தது.
இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளியில் இருந்து 450 மாணவர்கள் பங்கேற்றனர். கடலூர் ஆரோசைல்டு பள்ளியின் 5ம் வகுப்பு மாணவர் விமல் 50 மீபட்டர் பிளை, 50 மீப்ரீஸ்டைல், 100 மீஐ.எம்ஆகிய மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.பட்டம் வென்ற மாணவர் விமல் மற்றும் பயிற்சியாளர் அருணாவை பள்ளித் தாளாளர் ஜெயவேல், ஆசிரியர்கள் பாராட்டினர்.

