/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏப்., 15ம் தேதி தடைக்காலம் துவக்கம் மீனவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
/
ஏப்., 15ம் தேதி தடைக்காலம் துவக்கம் மீனவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ஏப்., 15ம் தேதி தடைக்காலம் துவக்கம் மீனவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ஏப்., 15ம் தேதி தடைக்காலம் துவக்கம் மீனவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஏப் 07, 2024 04:55 AM
கடலுார், : கடலுார் மாவட்டத்தில் ஏப்., 15ம் தேதி முதல் 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், கிழக்கு கடற்கரை கடல் பகுதியில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டு தோறும், ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14 வரையில், 61 நாட்கள் கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனால், கடலுார் மாவட்ட மீனவர்கள் மீன் பிடி தடைக் காலங்களில் கடலுக்கு சென்று விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் நலன் கருதி அரசு அறிவித்துள்ள மீன்பிடி தடை உத்தரவை கடைப்பிடித்து, கடலூர் மாவட்ட மீனவர்கள் 61 நாட்கள் முடியும் வரை விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். தடைக்காலத்தில் மீன்பிடித்தால், கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரித்துள்ளார்.

