/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரவுடிக்கு கத்திவெட்டு மர்ம நபர்களுக்கு வலை
/
ரவுடிக்கு கத்திவெட்டு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : ஆக 17, 2024 03:36 AM

கடலுார்: கடலுாரில் ரவுடியை வெட்டி மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், கம்மியம்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன் மகன் மூர்த்தி,25; ரவுடி. இவர் நேற்றிரவு 10:00 மணிக்கு கம்மியம்பேட்டை அய்யனார் கோவில் அருகில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென மூர்த்தியை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர்.
இதில்,படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
தகவலறிந்த கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூர்த்தியை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.