/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிவராகநத்தம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
ஆதிவராகநத்தம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 16, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் செல்வ கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம், வாட்டர் டேங்க் நகரில் புதிதாக செல்வ கற்பக விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் பூஜைகள் துவங்கியது.
நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் யாக சாலை பூஜையும், தொடர்ந்த மகா பூர்ணஹூதி தீப ஆராதனை நடந்தது. 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

