/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களுக்கு சைக்கிள்: எம்.எல்.ஏ., வழங்கல்
/
மாணவர்களுக்கு சைக்கிள்: எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : செப் 12, 2024 06:05 AM

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசின் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கினார். மேலும், பள்ளியில்
காலை, மாலை சிறப்பு வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டிக்காக நிதி வழங்கினார். மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஞானசங்கர், தலைமை ஆசிரியை செந்தாமரை செல்வி முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளியில் 167 மாணவர்களுக்கு, சைக்கிள்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் சுமதி ரங்கநாதன், சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், தலைமை ஆசிரியர் சகாயராஜா மற்றும் சண்முகம், சேகர், ஜெயச்சந்திரன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

