ADDED : ஏப் 05, 2024 05:14 AM
அ நிறம் | அளவு
திட்டக்குடி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக, எல்லைப்படை காவலர்கள் திட்டக்குடிக்கு வருகை தந்தனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக எல்லைப்படை காவலர்கள் நேற்று காலை விழுப்புரம் ரயில்வே ஜங்ஷனிலிருந்து திட்டக்குடிக்கு வந்து சேர்ந்தனர்.
உதவி ஆணையர் சம்புநாத் பர்மன், இன்ஸ்பெக்டர் அமுல்குமார் தலைமையில் 90 பேர், இடைச்செருவாய் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் தங்க வைக்கப்பட்டனர்.
