/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுத்தேர்வில் சாதனை பிராமணர் சங்கம் பரிசு
/
பொதுத்தேர்வில் சாதனை பிராமணர் சங்கம் பரிசு
ADDED : மே 14, 2024 05:25 AM
கடலுார்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனைப்படைத்த பிராமண சமூக மாணவர்கள் பரிசு பெற விண்ணப்பிக்க தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்க மாநில செயலாளர் திருமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிராமணர் சமூக மாணவ, மாணவியருக்கு பிராமணர் சங்கம் சார்பில் பரிசு வழங்கப்பட உள்ளது. கடலுார் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், திருவந்திபுரம், சாவடி, துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பிராமணர் சமூக மாணவ, மாணவியர் கடலுார் மஞ்சக்குப்பம் எண் 64, பாஷ்யம் ரெட்டி தெரு என்ற முகவரிக்கு கடிதம் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

