ADDED : ஆக 10, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: சேப்ளாநத்தம் அருகே பைக் மோதிய விபத்தில் கொத்தனார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வடலுார் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ், 45. கொத்தனார். இவர் நேற்று முன்தினம் ஊமங்கலம் பகுதியில் கட்டட வேலை செய்து விட்டு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கடலுார்-விருத்தாசலம் சாலை சேப்ளாநத்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்ற பைக் அந்தோணிராஜ் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அந்தோணி ராஜ் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.