/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில கால்பந்து போட்டி கடலுார் மாணவர்கள் சாதனை
/
மாநில கால்பந்து போட்டி கடலுார் மாணவர்கள் சாதனை
ADDED : மார் 12, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கடலுார் மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர்.
தஞ்சாவூரில் பி.எஸ்.பி.,கால்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடந்தது.இதில் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் கடலுார் வேவ்ஸ் கால்பந்து கழக வீரர்கள் கலந்து கொண்டு இரண்டாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மகேஷ்குமார், பயிற்சியாளர் பாபு ஆகியோரை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் பாராட்டினார்.