/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிரான்ஸ்பார்மரில் கம்பங்கள் சேதம்
/
டிரான்ஸ்பார்மரில் கம்பங்கள் சேதம்
ADDED : மே 28, 2024 06:25 AM

வடலுார் : கருங்குழி கிராமத்தில் டிரான்ஸ்பர்மரில் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி, புதிய கம்பங்களை பொருத்த மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடலுார் அடுத்த கருங்குழி, மேட்டுக்குப்பம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த பகுதி மக்களுக்கு வடலுார் துணை மின்நிலையம் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்த கிராமத்தில் உள்ள எஸ்.எஸ்.3 டிரான்ஸ்பார்மர் கம்பங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது.
இதனால், டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலை உள்ளது. இதனால், அப்பகுதியை பொதுமக்கள் தினசரி அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
எனவே, கிராம மக்கள் நலன் கருதி, டிரான்ஸ்பார்மரில் சேதமடைந்துள்ள கம்பங்களை அகற்றி, புதிய கம்பங்களை பொருத்த மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.