ADDED : பிப் 27, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் திருவந்திபுரம் சீனிவாச பெருமாள் கிடாம்பி ஆச்சான் கோவிலில், மார்ச் 2ம் தேதி திருப்பிரதிஷ்டை நாள் உற்சவம் துவங்குகிறது.
கடலுார் திருவந்திபுரத்தில் சீனிவாச பெருமாள் கிடாம்பி ஆச்சான் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, திருப்பிரதிஷ்டை நாள் உற்சவம் மார்ச் 2 ம் தேதி துவங்கி, 6ம் தேதி வரை நடக்கிறது.
தினமும் சிறப்பு ஹோமம் சகஸ்ரநாம அர்ச்சனை, திவ்யபிரபந்த சேவை நடக்கிறது. மார்ச் 2ம் தேதி திருக்கல்யாண உற்சவம், மார்ச் 6 ம் தேதி காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. உற்சவ தினங்களில் காலை மற்றும் மாலை வேளையில் வேதபாராயணம், திவ்ய பிரபந்த சேவை சாற்றுமுறை நடக்கிறது.