/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
/
பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
ADDED : ஜூன் 20, 2024 08:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் உள்ள இந்து உதவி பெறும் நடுநிலை பள்ளியில், விருத்தாசலம் தீயணைப்பு நிலையம் சார்பில், பேரிடர் கால மீட்பு, ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்வரசி தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர், சிறப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது என மாணவர்களுக்கு போலி ஒத்திகை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.