/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடுதல்
/
சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடுதல்
ADDED : ஜூன் 06, 2024 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சி தலைவர் சுதா ரத்தினசபாபதி தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டார். அப்போது, துணைத் தலைவர் சங்கர், ஊராட்சி செயலர் குமார், வார்டு உறுப்பினர்கள் ஜெயக்கொடி, குமார், மகளிர் குழுவினர், துாய்மை பணியாளர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர், நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் குறித்து பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.