ADDED : மே 22, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
கடலுார் அடுத்த உள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்,60; விவசாயி. இவர் நேற்று காலை ஏரிக்கரை அருகில் உள்ள தனது நிலத்திற்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
சந்தேகமடைந்த குடும்பத்தினர் தேடிச் சென்று பார்த்தபோது, வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி இறந்து கிடந்தார். துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

