ADDED : மே 22, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த ஊ.கொளப்பாக்கம் முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி, தனபூஜை, முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.
மாலையில் இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, மகா பூர்ணாஹூதி, ஆராதனை நடந்தது. நேற்று காலை மூன்றாம் கால பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நிகழ்வுடன், விநாயகர், முத்து மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம், மூலவருக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

