ADDED : மே 08, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : மரத்தில் மொபட் மோதி விபத்துக்குள்ளானதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கண்டியங்குப்பத்தை சேர்ந்தவர் அந்தோணிஜோசப், 21; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி தனது மொபட்டில் தேத்தாம்பட்டு சாலையில் சென்றார்.
சலேத் மாதா கோவில் தெரு அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி பலத்த காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.
இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.