ADDED : மார் 05, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி தமிழ்ப் பேரவை 140வது மாத இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி பாரதி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பேரவை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெகன் வரவேற்றார். புறநானூற்று பாடல் குறித்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நெடுமாறன், திருப்புகழ் பாடல்கள் குறித்து முனைவர் அன்பழகன் விளக்கம் அளித்தனர். துணை செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.