ADDED : மே 10, 2024 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மாயமான முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 62; சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 6ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், சோழத்தரம் பொலீசார் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை தேடி வந்தனர்.
இதனிடையே நேற்று பகல் 12:00 மணியளவில் கருணாகரநல்லுாரில் உள்ள வயல்வெளியில் ராஜேந்திரன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரன் உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து ராஜேந்திரன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.