sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பெண்ணாடத்தில் பயணிகள் அவதி

/

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பெண்ணாடத்தில் பயணிகள் அவதி

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பெண்ணாடத்தில் பயணிகள் அவதி

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பெண்ணாடத்தில் பயணிகள் அவதி


ADDED : ஜூலை 19, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைத்துள்ள தள்ளு வண்டி பழக்கடைகள், பூக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் உள்ள பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், அரியராவி, பெ.பூவனுார் உட்பட 30க் கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள் அன்றாட தேவைகளுக்கு விருத்தாசலம், திட்டக்குடி, கடலுார், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

பஸ் நிலைய வளாகத்தில் தள்ளு வண்டியில் பழக்கடைகள், பூக்கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பயணிகள் அமர முடியாத நிலை உள்ளது.

இதனால் பயணிகள் பஸ்சிற்காக திறந்தவெளியில் கால் கடுக்க காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைத்துள்ள தள்ளுவண்டி பழக்கடைகள், பூக்கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை அகற்ற போலீசார், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us