sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போக்குவரத்து விதிமுறை மீறல் அரசு, தனியார் பஸ்களுக்கு அபராதம்

/

போக்குவரத்து விதிமுறை மீறல் அரசு, தனியார் பஸ்களுக்கு அபராதம்

போக்குவரத்து விதிமுறை மீறல் அரசு, தனியார் பஸ்களுக்கு அபராதம்

போக்குவரத்து விதிமுறை மீறல் அரசு, தனியார் பஸ்களுக்கு அபராதம்


ADDED : மே 25, 2024 01:14 AM

Google News

ADDED : மே 25, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் போக்குவரத்து விதிமுறை மீறி சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிய அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு டிராபிக் போலீசார் அபராதம் விதித்தனர்.

கடலுார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில், புதுச்சேரி, சென்னை, விழுப்புரம், பண்ருட்டி மார்க்கத்திற்கு செல்லும் பஸ்கள் நின்று செல்ல 50 லட்சம் மதிப்பில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்திற்குள் செல்லாமல், சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில், டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் நேற்று அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பஸ் நிறுத்தத்திற்குள் நிற்காமல் சாலையோரத்தில் நின்ற இரண்டு புதுச்சேரி அரசு பஸ், ஒரு தமிழக அரசு பஸ் மற்றும் ஏழு தனியார் பஸ்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும், பஸ் நிறுத்தத்தில் மட்டுமே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என, அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us