ADDED : செப் 14, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு, ஆண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் மகன் கோபாலகிருஷ்ணன்,27; புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 11ம் தேதி தனது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக மன உளைச்சலில் இருந்தார். இதன் காரணமாக பூச்சி மருந்தை சாப்பிட்டார்.
புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.