கிருஷ்ணசாமி கல்லுாரியில் ராகிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணசாமி கல்லுாரியில் ராகிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 12, 2024 06:00 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் ராகிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் நிர்மலா தாங்கினார். மூத்த சிவில் நீதிபதி அன்வர்சதாத், வழக்கறிஞர்கள் கார்த்திகேயன, மாயவன் கலந்து கொண்டு ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார், நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், கல்லுாரி ஆன்டி ராகிங் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி, உதவி பேராசிரியை தீபசுந்தரி, ராபியத்துல் பஷிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
