sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நுாலகத்தை இடமாற்றம் செய்ய வாசகர்கள், மாணவர்கள் கோரிக்கை

/

நுாலகத்தை இடமாற்றம் செய்ய வாசகர்கள், மாணவர்கள் கோரிக்கை

நுாலகத்தை இடமாற்றம் செய்ய வாசகர்கள், மாணவர்கள் கோரிக்கை

நுாலகத்தை இடமாற்றம் செய்ய வாசகர்கள், மாணவர்கள் கோரிக்கை


ADDED : ஆக 18, 2024 11:30 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள கிளை நுாலகத்தை கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் இடமாற்றம் செய்ய வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மந்தாரக்குப்பம் என்.எல்.சி., குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை அரசு கிளை நுாலகம் செயல்பட்டு வந்தது. என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக என்.எல்.சி., குடியிருப்பு பகுதிகள் அகற்றப்பட்டு என்.எல்.சி., நிர்வாகம் தற்போது அந்த இடத்தை கையகப்படுத்தியுள்ளது. எனவே என்.எல்.சி., குடியிருப்பு பகுதிகளில் இருந்த கிளை நுாலகத்தை மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் இருந்த கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இடமாற்றம் செய்யப்பட்ட நுாலக கட்டடம் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ளதால் மாணவர்கள், முதியவர்கள் கிளை நுாலகத்திற்கு செல்ல சிரமப்படவேண்டிய நிலை உள்ளது.

மேலும் கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் கிளை நுாலகம் இல்லாததால் வாசகர்கள், மாணவர்கள், முதியவர்கள் உலக விஷயங்களை தெரியாமால் கவலை அடைகின்றனர். எனவே கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் சகல வசதிகளுடன் கிளை நுாலகத்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us