sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : ஜூன் 19, 2024 11:21 PM

Google News

ADDED : ஜூன் 19, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், விருத்தாசலம் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்திருந்த தள்ளுவண்டி பழகடைகள் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர்.

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, பழனி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு தினசரி பஸ் இயக்கப்படுகிறது.

இங்கு, ஆயிரத்ததிற்கும் மேற்பட்ட பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த பஸ் நிலையத்தில், தாறுமாறாக தள்ளுவண்டி பழக்கடைகள் நிறுத்தி சிலர் வியாபாரம் செய்தனர். இதன் காரணமாக, பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுசம்பந்தமாக 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

இதன்காரணமாக, நகராட்சி நகரமைப்பு அலுவலர் செல்வம், ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் நேற்று பஸ் நிலையத்திற்குள் இருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us