sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி மாணவிகள் வசதிக்காக பஸ்சை நீட்டிக்க கோரிக்கை

/

பள்ளி மாணவிகள் வசதிக்காக பஸ்சை நீட்டிக்க கோரிக்கை

பள்ளி மாணவிகள் வசதிக்காக பஸ்சை நீட்டிக்க கோரிக்கை

பள்ளி மாணவிகள் வசதிக்காக பஸ்சை நீட்டிக்க கோரிக்கை


ADDED : ஆக 13, 2024 05:38 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: நல்லுாரிலிருந்து பெண்ணாடம் வரை இயங்கும் அரசு பஸ்களை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை நீட்டிக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடத்திலிருந்து ஒன்றிய தலைமையிடமான நல்லுார் வரை, தடம் எண்12 மற்றும் தடம் எண்9 ஆகிய இரு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் சிறுமங்கலம், எரப்பாவூர், அருகேரி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இந்த பஸ்களில் ஏறிச்செல்கின்றனர். பெண்ணாடம் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ., துாரமுள்ள பள்ளிக்கு மாணவிகள் நடந்தே செல்லும் நிலை உள்ளது. எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவிகள் நலன் கருதி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை அரசு பஸ்களை இயக்க வேண்டும் என, போக்குவரத்துக்கழக நிர்வாகத்திற்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us