/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் மதுபானம் விற்ற இருவர் கைது
/
டாஸ்மாக் மதுபானம் விற்ற இருவர் கைது
ADDED : ஏப் 16, 2024 10:50 PM
விருத்தாசலம்,- விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எ.வடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மனைவி புவனேஸ்வரி, 38, என்பவர் தனது வீட்டின் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, புவனேஸ்வரியை கைது செய்தனர்.
அதேபோல், கொடுக்கூர் கிராமத்தில், கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற, அதேபகுதியைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சதீஷ், 45; என்பவரை கைது செய்தனர்.

